Published Date: January 1, 2023
CATEGORY: GENERAL

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு மெட்ரோ ரயில் பயணித்து சென்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேரள இலக்கியத் திருவிழா கலந்து கொண்டார். அங்கு நிதி கூட்டாட்சி: இறையாண்மை அரசின் பொருளாதாரம்' என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.
கேரள சென்று விமானம் மூலம் சென்னை திரும்பி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது காரில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டார்.
விரைவாக சட்டப்பேரவை செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அரசு எஸ்டேட் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோவில் தமிழக நிதியமைச்சர் சென்றார்.
தமிழக நிதியமைச்சருடன், கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் பத்திரிக்கையாளர் ஷோமா சவுத்திரி ஆகியோர் பயணம் செய்தனர். ரயில் பயணத்தின் போது, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சக பயணிகளுடன் உரையாடினார்.
ரயில் சேவை எப்படி இருக்கிறது, தமிழகத்தின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிந்தார்.
தமிழக நிதியமைச்சர் மெட்ரோ ரயில் பயணம் செய்வதை மக்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். அவருடன் பயணித்த சக பயணிகள் பலரும் நிதியமைச்சருடன் வீடியோ,புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
Media: tamil.economictimes.com